சத்துணவுத்திட்டம் – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் – தானியங்கி கண்காணிப்பு அமைப்பு (Automated Monitoring system) சத்துணவு உண்ணும் மாணவ/ மாணவிகளுக்கான சத்துணவு குறித்து தினசரி அறிக்கை பள்ளித் தலைமையாசிரியர்களால் குறுஞ்செய்தி (SMS) மூலம் சமூக நலத்துறைக்கு விவரம் அளிக்கப்படுவது – சார்பு

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும்

தொடக்க/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவினை உறுதி செய்திட தானியங்கி அமைப்பு (Automated Monitoring system) என்ற AMS அமைப்பு உருவாக்கப்பட்டு, இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது நியமிக்கப்பட்ட ஒரு பொறுப்பாசிரியர் SMS மூலம் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு செய்தி தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதில் கூடுதல் தனிகவனம் செலுத்தி AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை SMS செய்தியினை காலை 11 மணிக்குள் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்