ஓவியப்போட்டி – “சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு” – ஈஷா பசுமைக்கரங்கள் என்ற அமைப்பின் மூலம் நடத்துதல்

ஈஷா பசுமைக்கரங்கள் அமைப்பு மூலம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்,

ஈஷா பசுமைக்கரங்கள் என்ற அமைப்பு “சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு” என்ற தலைப்பில் நடத்தும் ஓவியப்போட்டி 12.10.2018 அன்று அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

போட்டி நேரம் : காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை

பிற்பகலில் கருத்தங்கு நடைபெறவுள்ளது.

மேற்படி போட்டியில்  பங்கேற்க ஈஷா பசுமைக்கரங்கள் அமைப்பு மூலம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பள்ளிக்கு ஒருவர் வீதம் உரிய பாதுகாப்புடன் – அமைப்பு சார்ந்த ஆசிரியருடன் பங்கேற்க தலைமையாசிரியர் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.