உலக மாற்று திறனாளிகள் தினத்தை கொண்டாடுதல்_ சார்பாக

உலக மாற்று திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையிலும் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை காலை இறைவணக்கக் கூட்டத்தில் பாடவும், வேற்றுமையை ஒழிப்போம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவும் வேண்டும். மேலும் இது வரை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சைகை மொழி வார்த்தைகள் மற்றும் எண்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொள்ள வேண்டும்.

உறுதிமொழி link

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக்கல்விஅலுவலர்,

 வேலூர்