ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 – அனைத்து உடற் கல்வி இயக்குநர் நிலை 1 , நிலை 2, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து உடற் கல்வி ஆசிரியர்கள் , NSS ஆசிரியர்கள் , NCC ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீடு

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு 2019க்கான தேர்வு பணி ஒதுக்கீடு செய்வதற்கு கீழ்க்காணும் ஆசிரியர்கள் 03-06-2019 அன்று மாலை 04.00 மணிக்கு வேலூர் மாவட்டம், காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட  அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. உடற்கல்வி இயக்குநர் நிலை 1

2. உடற் கல்வி இயக்குநர் நிலை 2

3. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற் கல்வி ஆசிரியர்கள்

4. NSS ஆசிரியர்கள்

5. NCC ஆசிரியர்கள்

 

முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்

 

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பு

சாரண சாரணியர் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்கள் தற்போது வருகைபுரிய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.