அவசரம் – அரசுப் பொதுத் தேர்வினை எதிர்கொள்ளுதல் என்ற நிகழ்ச்சி 14.12.2023 இன்று பிற்பகல் 3.00 மணிக்கு -உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்- பங்கு பெறுதல் -தொடர்பாக

அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நமது அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகத்தின் வாயிலாக ( High_Tech Lab ) அரசுப் பொதுத் தேர்வினை எதிர்கொள்ளுதல் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அரசுப் பொதுத் தேர்வுக்கு மாணவ மாணவிகளைத் தயார் செய்யும் ஆசிரியர்கள் ( நடைபெறும் அரையாண்டுத் தேர்வுப் பணியில் ஈடுபட்டவர்கள் தவிர ) ஆய்வகத்தில் அமர்ந்து கீழ் உள்ள link – ஐ பயன்படுத்தி Hi-Tech Lab – ல் உள்ள அனைத்து கணினிகளிளும் தனி தனியே அமர்ந்து பங்கு பெறுதல் வேண்டும்.

//ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.