அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறானளி மாணவர்கள் விவரம் மற்றும் நூலகம் இலவச பயண அட்டை பெற்றவர்கள் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் சமர்ப்பிக்க கோரியது – இதுநாள் வரை இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்கப்படவில்லை – உடன் நேரில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் விவரமும் பள்ளியில் உள்ள நூலகம் மற்றும் இலவச பேருந்து பயண அட்டை பயன் பெற்ற மாணவ / மாணவியர்களின் விவரம் உடன் சமர்ப்பிக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 19-07-2021 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக “ஆ1” பிரிவு எழுத்தரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு பார்வை 2ல் காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுநாள் வரை இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து உரிய படிவங்கள் கிடைக்கப்படவில்லை. இதனால் உரிய நேரத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர்அவர்களுக்கு தகவல்கள் தொகுத்து சமர்ப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இன்றே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஆ1’ பிரிவில் ஒப்படைக்குமாறு இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORMS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CEO, VELLORE