அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தனியார் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணையின்படி மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் இன்று 08.12.2022 பிற்பகல் 3.00 மணிவரை மட்டுமே பள்ளி இயங்கும். கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை முன்னிட்டு நாளை 09.12.2022 அன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
by ceo
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து தனியார் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தனியார் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்