அனைத்துவகை மேல்நிலை/ உயர்நிலை/ நடுநிலை/ தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லா பணியாளர்கள் கவனத்திற்கு – தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பள்ளி அளவில் விழாக்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தவிர்த்து கற்றல் பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை மேல்நிலை/ உயர்நிலை/ நடுநிலை/ தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லா பணியாளர்கள் கவனத்திற்கு,

வேலூர்  மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிகள் மாவட்டம் முழுவதும் அமலில் உள்ள நிலையில் அனைத்துவகை மேல்நிலை/ உயர்நிலை/ நடுநிலை/ தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மேற்காண் தேர்தல் நடைமுறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் விதிகளை மீறிய பதிவுகளை சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், (Whatsapp) பேஸ்புக் (Facebook) போன்றிவற்றில் பதிவு செய்ய கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பள்ளி அளவில் விழாக்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தவிர்த்து கற்றல் பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.