ALL CATEGORIES OF PUPS/PUMS/HIGH & HR.SEC.SCHOOL HMS – தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியில் இடம்பெறும் வகையில் “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2019” என்ற தலைப்பில் தங்கள் பள்ளி சார்பாக ஓவியம் வரைந்து 18.03.2019 (திங்கள்) மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்கத் தெரிவிக்கப்பட்டது – ஒப்படைக்காத பள்ளிகள் இன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘சி3’ பிரிவில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியில் இடம்பெறும் வகையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2019” என்ற தலைப்பில் தங்கள் பள்ளி சார்பாக ஓவியம் வரைந்து 18.03.2019 (திங்கள்) மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்கத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் பெறும்பாலான பள்ளிகள் ஒப்படைக்காமல் உள்ளனர். எனவே, ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக இன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘சி3’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஓவியம் முழு Chart அளவில் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்