வேலூர் பள்ளிக்கல்வி மற்றும் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் இணைந்து மரக் கன்றுகள் வளர்க்கும் பயிற்சி வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் 25.06.2019 அன்று நடைபெறுதல் வழங்குதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (13.06.2019 அன்று நடைபெற்ற துவக்க விழா பயிற்சியில் கலந்துகொள்ளாத உயர்நிலைப் பள்ளிகள் மட்டும்)

ஈஷா பசுமை பள்ளி இயக்கம் சார்பில் நடத்தப்படும் பயிற்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழா 13.06.2019 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து தலா ஒரு பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் தவறாமல் கலந்துகொள்ள தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில பள்ளிகளில் இருந்து மாணவர்கள்/ ஆசிரியர்கள் எவரும் பங்கேற்கவில்லை.

எனவே, 25.06.2019 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பயிற்சியில் 13.06.2019 அன்று கலந்துகொள்ளாத பள்ளியிலிருந்து ஒரு பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் அனுப்பிவைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள 35 பள்ளிகள் பட்டியலில் இருந்து கலந்துகொள்ளாத பள்ளிகளும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS (35 HSS)

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.