மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

வேலுர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த மேல்நிலைமுதலாமாண்டு  விடைத்தாள் வழங்க கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளுதல் மற்றும் அதனை தொடர்ந்து மறுகூட்டல் , மறுமதிப்பீடு தேவைபடுவோர்  சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்தல் சார்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இத்தகவலினை தங்கள் பள்ளியின் அறிவிப்பு பலகை மற்றும் சுற்றறிக்கை மூலம் மாணவர்கள் , பெற்றோர்களுக்கு தகவல் அறியும்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேலுர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

+1 Scan copy downloading Notification

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள அனைத்து  மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.