மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் விண்ணப்பம் பெறுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு  பொதுத் தேர்வுகள் தொடர்பாக விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விடைத்தாளினை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு  வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 21-05-2019 பிற்பகல் 02.00 மணி முதல் 23-05-2019 மாலை 05.00 மணிவரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது என்ற  விவரத்தினை சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு மற்றும் அறிவுரைகள் கடிதம் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

+1 March 2019 Scan Copy Downloading

+1 Mar 2019 RT RV Instructions for CEO

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.