மேல்நிலை முதலாமாண்டு (பழையத்திட்டம்) மற்றும் இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019 விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு (பழையத் திட்டம்) மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வில்  தோல்வியடைந்த மாணவர்கள் ஜீன் 2019ல் உடனடி சிறப்புத் துணைத் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் விண்ணப்பித்தல் சார்பான செய்திக்குறிப்பு  இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அச்செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய குறிப்பு  =  பழைய பாடத்திட்டத்தில்  தேர்வு எழுத ஜீன் 2019 சிறப்புத் துணைத் தேர்வே இறுதி வாய்ப்பாகும் என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்.

இணைப்பு

NOTIFICATION

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.