மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் உரிய ஆவணங்கள் ஒப்படைக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

13-02-2019 முதல் நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு  செய்முறைத் தேர்வுகள் முடியும் நாள் அன்று அல்லது தேர்வு முடிவுற்ற நாளுக்கு மறுநாள் காலை 11.00 மணிக்கு செய்முறைத் தேர்வுகள் சார்பான மதிப்பெண் பட்டியல் மற்றும் அது சார்பான ஆவணங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.