மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பூதியம் அடிப்படையில் (அரசாணை எண் 51 நாள் 21-03-2018ன்படி பற்றுச்சீட்டுக்கள் தயார் செய்து இரண்டு நகல்களில் 20-04-2018க்குள் ஒப்படைத்தல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

வேலுர் மாவட்டத்தில் மார்ச் / ஏப்ரல் 2018ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பூதியம் அடிப்படையில்  (அரசாணை எண் 51 நாள் 21-03-2018ன்படி) பற்றுச்சீட்டுக்கள் தயார் செய்து இரண்டு நகல்களில்                               20-04-2018க்குள் ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆ5 பிரிவு எழுத்தரிடம் தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்