மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 விடைத்தாளுடன் முகப்புத்தாள் இணைப்பது சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டிற்கான பெயர் பட்டியல் அனைத்து தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் முகப்புத்தாட்கள் விடைத்தாளுடன் உடனடியாக இணைக்கப்படல் வேண்டும். மேலும் கீழ்க்குறிப்பிட்டள்ள அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. தங்கள் தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் முகப்புத்தாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.

2. தங்கள் தேர்வு மைய பெயர் பட்டியலில் மாணவனின் பெயர் இடம் பெற்று முகப்புத்தாட்கள் பெறப்படவில்லை என்றால் பெயர் பட்டியலில் விவரம் குறிப்பிட்டு அதன் நகல் உடனடியாக வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பி 5 பிரிவு எழுத்தரிடம் 15-02-2019 அன்று பிற்பகல் 01.00 மணிக்குள் ஒப்படைக்கப்படவேண்டும்.

3. தங்கள் தேர்வு மைய பெயர் பட்டியலில் மாணவர்களின் விவரங்கள் இடம்பெறாமல் வேறு மாணவர்களின் முகப்புத்தாட்கள் பெறப்பட்டிருப்பின் அந்த முகப்புத்தாட்களை வேலுர் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 15-02-2019 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

4. வேலுர் கல்புதுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட முகப்புத்தாட்களை எக்காரணம் கொண்டு வேறு பள்ளிகளுக்கு வழங்கப்படகூடாது . குறிப்பாக முகப்புத்தாட்களை நகல் எடுக்க கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. முகப்புத்தாள் சார்பான புகார் பெறப்படின் சார்ந்த தேர்வு மைய தலைமைஆசிரியர் மீது துறை சார்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இறுதியாக தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.