மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – தேர்வு பணி தொடர்பான அறிவுரைகள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 தொடர்பாக தேர்வு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பணியிலிருந்து விடுவிக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டும் தேர்வு பணியினை மேற்கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமா தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்வு பணி என்பதால் தனி கவனம் செலுத்துமாறும் மந்தன தன்மையினை கடைபிடித்து எவ்வித புகாருக்கம் இடமளிக்காவண்ணம் செயல்பட உரியவர்களுக்கு அறிவுரை வழங்கி பணியிலிருந்து விடுவிக்கும் படி அனைத்து  பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.