மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்

 

தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  தேர்வு மைங்களில் 26-02-2020 காலை 10.00 மணிக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று பொறுப்பினை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.

 

26-02-2020 அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள்

நகல்

1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்ககாவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.

2. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்