மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகள் – தேர்ச்சி அறிக்கை வழங்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019 நடைபெற்று முடிந்த மேல்நிலைப் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று வெளியிடப்பட்டது. தங்கள் பள்ளியின் தேர்ச்சி அறிக்கையினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1 மற்றும் படிவம் 2 பூர்த்தி செய்து இரு நகல்கள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 24-04-2019 அன்றுக்குள்  தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

+2 தேர்ச்சி அறிக்கை (Modified Forms)

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பு

தங்கள் கல்வி மாவட்டத்திற்குள் உள்ள அனைத்து பள்ளிகளிலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள விவரத்தினை பெற்று புத்தக வடிவில் தொகுத்து கணினியில் பதிவு செய்து அதன் விவரம் அடங்கிய சிடியினை  26-04-2019 அன்று மாலை 03.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.