மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு முடிவுகளுக்குப் பின் விடைத்தாட்கள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் 19-04-2019 அன்று வெளியிட்ட பின்  பள்ளி மாணவர்கள் தாம் பயின்ற பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாக விடைத்தாட்கள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆன் லைனில் விண்ணப்பித்தல் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவுரை கடிதம் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது. அக்கடித்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

RV RT Instructions to HM’s Mar2019

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.