மேல்நிலைப்பொதுதேர்வு மார்ச் 2019- மதிப்பூதியம்/ உழைப்பூதியம்/ சில்லரை செலவினம் – ஆவணங்களை கல்புதூர், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து வகை மேல்நிலைப் பொதுத்தேர்வு மையம் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு,

மார்ச் 2019 மேல்நிலைப்பொதுத்தேர்வு மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கு உண்டான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பற்றொப்ப இரசீதுகளை தயார் செய்து வேலூர், காட்பாடி, கல்புதூர், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தேர்வுகள் முடிவுற்ற மறு நாள் ஒப்படைக்கப்பட வேண்டும் என முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

(மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு மையத்திற்கு தனியாகவும், மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு மையத்திற்கு தனியாகவும் தயார் செய்து இரு நகல்களில் ஒப்படைக்கப்பட வேண்டும்)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.