மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வில் தோல்வியடைந்து உடனடி பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) 16.05.2019 மற்றும் 17.05.2019 ஆகிய இரண்டு நாட்கள் மற்றும் விண்ணப்பிக்க தெரிவித்தல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்தற்கு

மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து  உடனடித் பொதுத் தேர்வு எழுதுவதற்கு 10-05-2019 முதல் 14-05-2019 வரை சார்ந்த பள்ளியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்காதோர் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  16-05-2019 மற்றும் 17-05-2019 ஆகிய இரு தினங்களில் நேரில் வருகை புரிந்து  விண்ணப்பிக்கலாம் என்ற விவரத்தினை சார்ந்த மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் செயல்படுமாறும்  மேலும் இத்துடன் சென்னை அரசுத் தோவுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மற்றும் செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

+1 – June – Takkal Press Release

+ 1 – June – Takkal Instruction to CEO

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.