மார்ச் 2019ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜீன் 2019 சிறப்புத் துணைத் பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்தல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வருகை புரியாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் ஜீன் 2019 சிறப்பு துணைத் பொதுத் தேர்வில் தேர்வு எழுத 06-05-2019 முதுல் 10-05-2019 வரை ஆன் லைனில் விண்ணக்க வேண்டும். பள்ளி  மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு எழுத விண்ணப்பிக்க வருகை தரும் மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவுகள் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன்இது சார்பான செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி  எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் செயல்படுமாறு மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

SSLC private candidate – applying press release(1)

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.