மார்ச் 2018ம் மேல்நிலை முதலாமாண்டு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்போது தேர்வு எழுத தேர்வுக்கட்டணம் செலுத்த கோருதல்

நினைவூட்டு

சென்ற ஆண்டு (மார்ச் 2018) மேல்நிலை முதலாமாண்டு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் இவ்வாண்டு (மார்ச் 2019) தேர்வு எழுதுவதற்கான தேர்வு கட்டணம் செலுத்தாத  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2018ம் மாதம் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதி தேர்வில்  தோல்வியுற்ற மாணவர்கள் தற்போது மார்ச் 2019ல் தேர்வு எழுதுவதற்கான தேர்வுக் கட்டண விவரத்தினை அரசுத்தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட User ID  மற்றும் Password பயன்படுத்தி Down lode செய்து அக்கட்டத்தினை வேலுர் மாவட்டம், காட்பாடி, கல்புதுர், அரசுத் தேர்வுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 21-01-2019 அன்றுக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்

 

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்