மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09-07-2019 அன்று நடைபெற்றமை , கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய விளக்க கடிதத்துடன் 11-07-2019 மாலை 5.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிய வேண்டும்.

கீழ்க்காணும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்தற்கு

மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09.07.2019 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளிதலைமை ஆசிரியர்கள் உரிய விளக்க கடிதத்துடன் 11-07-2019 அன்று மாலை 05.00 மணிக்கு வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  நடைபெறவுள்ள கூட்டத்தில் கட்டாயம்  தலைமை ஆசிரியர்கள் மட்டும்  கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், கூட்டத்திற்கு வரும்போது இவ்வாண்டு தேர்ச்சி சதவீதத்தினை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை விவரத்தினை கொண்டுவரும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

11-07-2019 அன்று நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்துக்கொள்ள வில்லை என்றால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

1. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தக்கோலம்,

2. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி காவேரிப்பாக்கம் ,

3. கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி வாணியம்பாடி ,

4. அரசு மேல்நிலைப் பள்ளி சத்துவாச்சாரி,

5. அரசு மேல்நிலைப் பள்ளி மேல்பட்டி,

6. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி புதுப்பேட்டை

7. இந்து மேல்நிலைப் பள்ளி, ஆம்பூர்

8. ஊரிஸ் மேல்நிலைப் பள்ளி வேலுர்

9. அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர்

10. கன்கார்டியா உயர்நிலைப் பள்ளி பேர்னாம்பட்டு

11. அரசு உயர்நிலைப் பள்ளி அகரம்சேரி

12. அரசு ADW மேல்நிலைப் பள்ளி காரை இராணிப்பேட்டை

13. அரசு உயர்நிலைப் பள்ளி குடியாத்தம்

14. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பனப்பாக்கம்

15. ஆம்பூர் சக்கரை ஆலை மேல்நிலைப் பள்ளி, வடபுதுப்பட்டு

 

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

 

பெறுநர்

மேற்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் உரிய தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.