பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 பெயர் பட்டியலில் உள்ள பிழைகள் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2020 பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள பிழைகள் ஏதேனும் இருப்பின் பள்ளி அளவிலேயே திருத்தங்கள் மேற்கொள்ள இறுதிவாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் வழங்கிய கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு

பிழைகள் திருத்தம் செய்ய இதுவே கடைசி வாய்ப்பு என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. திருத்தங்கள் மேற்கொண்ட பிறகும்  பெயர்பட்டியல் பிழைகள் இருந்தால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களே முழுபொறுப்பாவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு

SSLC.+1&+2 NR Correction

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.