பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடத்திற்கான பொது தேர்வு – மாணவர்களின் முகப்புத் தாள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய கோருதல்

இணைப்பில் காணும் ஒருங்கிணைந்த வேலுர் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்ப நிறுத்தப்பட்ட பாடத்திற்கான தேர்வுகள் தொடர்பான மாணவர்களின் முகப்புத்தாள் இதுநாள் வரை பதிவிறக்கம் செய்யப்படாமல் இருப்பது வருந்ததக்க செயலாகும் எனவே இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் உள்ள சார்ந்த பள்ளி மாணவர்களின் முகப்புத்தாட்களை 19-06-2020 அன்று மாலை 05.30 மணிக்குள்  பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு

PENDING SCHOOL LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்

பெறுநர்

சார்ந்த உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.