நினைவூட்டு – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள – பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ இயங்கும் அரசு/ அரசு நிதயுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் – முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத்தை அளித்தல் சார்பான விவரத்தை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  அரசாணை 41-ஐ பதிவிறக்கம் செய்து கொரோனா சார்பாக விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத்தை அளித்தல் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைப்பிணை Click செய்து படிவத்தில் விவரங்களை உள்ளீடு செய்யும்படி ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை சில பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர்.

எனவே, உடனடியாக இணைப்பில் உள்ள பள்ளிகளின் (இணைப்பில் உள்ள பள்ளிகள் மட்டும்) தலைமையாசிரியர்கள்  இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் மறு நினைவூட்டிற்கு இடமின்றி விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE G.O.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.