அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு – தொலைபேசியினை (Land Line) பயன்பாட்டில் வைக்கவும், தொலைபேசி இல்லாத அல்லது செயல்படாத பள்ளிகளில் தொலைபேசி இணைப்பினை சரி செய்யவோ அல்லது புதிய இணைப்பினை பெற அறிவுரை வழங்குதல்

அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்களுக்கு,

தொலைபேசியினை (Land Line) பயன்பாட்டில் வைக்கவும், தொலைபேசி இல்லாத அல்லது செயல்படாத பள்ளிகளில் உடனடியாக  தொலைபேசி இணைப்பினை சரி செய்யவோ அல்லது புதிய இணைப்பினை பெற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வுப்பணியினை மேற்கொள்ளும் முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைகண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் தேர்வு நேரங்களில் எக்காரணத்தைக்கொண்டும் கைபேசியினை பயன்படுத்தக்கூடாது எனவும் மீறும் பட்சத்தில்கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.