அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு – இடைப்பருவத்தேர்வு திருத்தம் சார்பான அறிவிப்பு

/இடைப்பருவத்தேர்வு –திருத்தம்/

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

  • 14.11.2018 அன்று குழந்தைகள் தின விழா அனைத்துப்பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் பொருட்டு அன்றைய தேர்வுகள் மட்டும் 24.11.2018 அன்று காலை 10.00 மணி முதல் 11.30 வரை நடைபெற வேண்டும்.
  • பதினோராம் வகுப்புக்கான Computer science, Computer technology. Computer
    Applications ஆகிய பாடங்களுக்கான வினாத்தாட்கள் வினாத்தாள் பகிர்வு மையங்களில் 14.11.2018 அன்று தயார்நிலையில் இருப்பதால், சார்ந்த தலைமையாசிரியர்கள் எண்ணிக்கையினை சரிபார்த்து அதன் விவரத்தை  ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • இடைப்பருவத்தேர்விற்கான வினாத்தாட்கள் வினாத்தாள் பகிர்வு மையத்திலிருந்து ஒரே கட்டாக வழங்கும்படி வினாத்தாள் பகிர்வு மைய தலைமையாசிரியக்ள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்